Thursday, August 10, 2017

உன் பொண்டாட்டி ஊர மேய போயிடுவா

ரெங்கநாதன் மாமா எனக்கு முன்னோடி. எனக்கு பல விசயங்களை பரிணாம அடிப்படையில் அவரால் இயன்றவரை தெளிவாக்கியிருக்கிறார். அவரோடு இருக்கையில் அதிகப்படியாக காமம் சார்ந்த விளக்கங்களும் கேளிகளும்தான் பாதி வயதிற்கு மேல் எனக்கு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. நிறைய வாசித்த அனுபவம் உள்ளவர். அதுமட்டுமல்ல கொஞ்சம் சமகால உலகநடைமுறையும் நுணுக்கமாக சொல்ல தெரிந்தவர்.

ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கிறார். ஊரில் இழவென்பதால் ஊர் எல்லைக்கப்பால் இருக்க வேண்டும். ஆளுக்கொரு பியர் குடித்துவிட்டு. மாமாவின் பங்காளி ஒருத்தரின் மோட்டார் கொட்டகையில் இரவை கழித்தோம். அப்போது பியர் முடிந்த கொஞ்ச நாழிகையில் திவ்யா அக்கா வந்தாள். மாமா என் போனை வாங்கி டார்ச் அடித்தபடி அவளை கொஞ்ச தூரத்திலிருந்து தென்னந்தோப்புக்கு அழைத்து போனார்.

மாமா என்னைவிட ஏழு வயது மூத்தவர். அவர் வீட்டுக்கு ஒரே ஒரு பிள்ளை. நான் பிறந்ததுமே அவரிடம் தூக்கி கொடுத்து விட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். என் பால்யம், பதின்மம் தொட்டு இதுவரையிலும் என் வாழ்வின் பெரும்பகுதி மாமாவோடுதான் கழிந்திருக்கிறது. அவரோடு அவர் வீட்டு மொட்டமாடியில்தான் உறங்குவேன். அவர் வெளியூரில் தங்கி கல்லூரி படிப்பை படித்த போது ஒரு காதலியின் பசலை நோயை கொண்டிருப்பேன். ஊருக்கு வருகிறார் என்றால் மனம் கொண்டாட்டத்தில் குதூகலிக்க ஆரம்பித்து விடும். என்னிடமுள்ள நல்ல கெட்ட குணங்கள் அனைத்துமே மாமாவிடம் இருந்து தொற்றிக்கொண்டவைதான்.
Photo
கல்லூரியில் உடன் படித்த பெண்ணை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளுமளவு நேசித்தார்கள். அந்த அக்கா நல்ல அழகு.பெயர் மஞ்சு. நான் மஞ்சுக்கா என்றுதான் அழைப்பேன். மாமாவுக்கு ஏற்ற குணம். என்னிடம் இரண்டு மூன்று நாளைக்கு ஒரு முறை கால்செய்து பேசிவிடும். நிறைய முறை நேரில் சந்திக்க மாமா அழைத்து போவார். மாமா நான் கேட்கும் சந்தேகத்தையெல்லாம் அப்படியே அக்காவிடம் சொல்லி சிரிப்பார் போல. அந்த அக்காவும் கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் என்னிடம் அதை விசாரிக்கும். "உள்ள விட்ட பிறகு ஒன்னுக்கு வந்தா என்ன பன்னுறது?" என்றொரு சந்தேகத்தை மாமாவிடம் கேட்டேன். பயங்கரமாக சிரித்துவிட்டு அந்த நேரத்தில் ஒன்னுக்கு ரெண்டுக்கெல்லாம் வராதுடா என்று விளக்கியதை மாமா அக்காவிடம் சொல்லியிருக்கிறார். அக்கா அதை வைத்தே ஒரு வாரம் என்னை கலாய்த்தது.

தன் காதல் திருமணத்திற்கு வீட்டில் சம்மதம் அளிக்க வில்லையென கோபப்பட்டு விளையாட்டாய் மிரட்டுவதற்கு சுருக்குப்போட முயற்சித்து எக்குத்தப்பாகி நிஜமாகவே சுருக்கிட்டு இறந்து போனாள். அக்கா இறந்து நான்கு வருடமாகிறது. எத்தனையோ இடத்தில் நல்ல நல்ல வரன்கள் அமைந்தும் மாமா நிராகரித்து கொண்டே இருக்கிறார். அவரால் அக்காவின் இழப்பை விட்டு வரமுடியவில்லை. தாய் தந்தைக்காக சென்னையில் வேலை பார்க்கிறார் நல்ல சம்பளம் நல்ல வேலை. இப்போது நானும் அவரோடுதான் வேலை பார்க்கிறேன். கல்யாணம் செஞ்சுக்கு மாமா என்று ஒருமுறை குடிக்கும்போது சொன்னேன். பளீரென அறைந்து விட்டார். நான் தேம்பி தேம்பி அழுதேன் அதை சமாதானம் செய்வதற்காக அன்று ஒரு ac பாருக்கு அழைத்து போய் பீர் வாங்கி தந்தார்.

நேற்றிரவு மாமா சொன்னதெல்லாம் எனக்குள் எதிர்கால தாம்பத்ய வாழ்வின் மீதான பயத்தை கூட்டுகின்றன. இந்த இழவு வீட்டில் அமர்ந்தும் கூட மாமாவின் பேச்சுகள் காதில் ஒலித்துகொண்டே......
Photo
இறந்து போன இந்த தாத்தா கூட எனக்கு சினேகிதர்தான் . இவரும் காமம் சார்ந்த விசயங்களை நிறையவே சொல்லியிருக்கிறார். இந்த தாத்தாவின் கணக்குப்படி ஆணை விட பெண்ணுக்கே காமத்தின் மீது பெரும் ஈர்ப்பு. பெண் ஒருவனை அடைய நினைத்தாளென்றாள் அடைந்தே தீருவாள். ஆண்களுக்கான அறம் சார்ந்த கதையொன்றும் எனக்கு சொல்லியிருக்கிறார்.
அந்த கதை:

"
பெரிய நிலபலமுள்ள குடும்பம். அண்ணன் இறந்து விட்டான். அம்மா அப்பா இல்லை. அண்ணிதான் எல்லாமும். மொத்த சொத்துகளையும் அண்ணிதான் கவனித்து வருகிறாள். தம்பிக்காரன் ஊதாரித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. கேட்க ஆளில்லை. சொத்தை பிரித்து கொடென்று கலகம் செய்தான். பிரித்தாயிற்று. அத்தனை சொத்துகளையும் ஒரு வேசியிடம் இழந்தான். சொத்திழந்தவனை அண்ட விடாமல் வேசி துரத்தினாள்.

நிராதரவற்று நிற்கையில் அண்ணி அழைத்தாள். கூனிக்குறுகிப்போய் அண்ணி வீட்டுக்கு போனான். அப்போதும் தனக்கு பணம் வேண்டுமென மன்றாடினான். அண்ணி அவனை குளிக்க வைத்து . பிறகு தானும் குளித்து விட்டு. புது சேலை நகை நட்டெல்லாம் உடுத்தி. கோழியடித்து குழம்பு சமைத்து கொழுந்தனுக்கு பரிமாறினாள்.

"

என் எண்ணம் வேறு மாதிரி யோசிக்க ஆரம்பித்து விட்டது. ஏன் உங்களின் எண்ணம் கூட இந்த இடத்தில் எதை யோசிக்கிறது சொல்லுங்கள்? ....

ட்விஸ்ட் என்ற திரைமொழி யுக்தியை இவர்கள் அப்பொழுதே கதையில் வைத்துள்ளார்கள்.கிட்டத்தட்ட ஒரு திரைப்பட இடைவேளை போல தாத்தா அந்த இடத்தில் கதையை நிறுத்தி விட்டு என்னை பார்த்தார். அருகிலிருந்த சொம்பை எடுத்து நீரருந்திவிட்டு. தொண்டையை கனைத்தபடி. புத்தி போறத பாரு என்று என்னை சிரித்துக்கொண்டே அதட்டினார்.
சரி மேல சொல்லு தாத்தா என்றேன்.

"
அண்ணி தான் அணிந்திருந்த நகைகளையெல்லாம் கழட்டினாள். பிறகு அதை ஒரு துணியில் கட்டி. கொழுந்தனிடம் தந்தாள். ஆனால் ஒரு கட்டளையோடு தந்தாள்.

கட்டளை என்னவென்றால். அவன் அந்த வேசியிடம் இந்த நகையை தரும்போது. அந்த வேசி அம்மணமாக இருக்க வேண்டும். முன் பக்கம் குணிந்து தொடைகளுக்கு இடையில் முகத்தை காட்டி. கைகளை நீட்டி அவள் அந்த நகைகளை வாங்கி கொள்ள வேண்டும். இவன் அவளுக்கு பின்னாலிருந்து அவள் முகத்தை பார்த்து ஒவ்வொன்றாய் தரவேண்டும்.

அதே கட்டளையை வேசியிடம் சொன்னான். வேசியும் பொருளாசையால் அவ்வாறு அம்மணமாகி பிறகு அதே போல் குணிந்து கையை நீட்டினாள். இவன் அவள் முகத்தையும் பின்னிருந்து அவள் உறுப்பையும் பார்த்தான். பல ஆடவர் ஆடிய அவ்வுறுப்பின் கோலம் அவனுக்கு ஒவ்வாமையை தந்தது. ச்சீ இதுக்காகவா இவ்வளவு இழந்தோமென தன்னை தானே நொந்து கொண்டான். பிறகு அத்தனை நகைகளையும் சுருட்டிக்கொண்டு போய் அண்ணியாகிய அம்மாவிடம் தந்து மன்னிப்பு கேட்டு. நிலபலத்தை கவனித்து நல்ல மனிதனான்.

"
இந்த கதையை நேற்றிரவு மாமாவிடம் சொன்னபோது என்னை கலாய்த்தார். ஏண்டா இவ்வளவு சொன்னானே அந்த கிழவன். தன் மருமகள் கிட்டயே முயன்று செருப்படி வாங்கிய விசயம் உனக்கு தெரியாதா என்று சம்பவத்தை கூறி திடுக்கிட வைத்தார்.

இந்த இழவு வீட்டில் ஒரே ஒரு முகம் மட்டும் பொய் சோகத்தை பூசியிருக்கிறதென்றால் அது அவர் மருமகளின் முகம்தான். கடமைக்கு அந்த இழவை சமாளிக்கிறாள் என்பது அப்பட்டமாக அவள் முகத்தில் தெரிகிறது.

காமம் என்பது நல்ல பாம்பு மாதிரிடா பயலே. நாம என்னதான் அடக்கி வச்சாலும் அது க்ரூர தன்மையுடையது. அடக்கிய விஷத்தையெல்லாம் கக்கும்போது பயங்கர க்ரூரம் வெளிப்பட்டே தீரும். இதோ இந்த இறந்த கிழவனை போல. அறமுள்ள மனிதனாக ஊரில் காட்டிக்கொண்டவனின் க்ரூரம் வீட்டில் எப்படி?
அதுதாண்டே காமம். என்று மாமா உணர்ச்சியாய் பேசினார்.

நான் கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் மொபைலை தடவினேன். என் முகநூல் காதலி "ஏய் பொறுக்கி எங்கடா இருக்க? என்ன பன்ற? .... உன்கிட்ட பேசினாலே எனக்கு ஈரமாகிடுதுடா .... உன் அணைப்புல ஒரு இரவை உறங்கி கழிக்க வேண்டும். எப்போதுடா?" என்று காமம் ஒழுக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தாள். நான் முன்னமே ஒருமுறை லேசாக இதைப்பற்றி மாமாவிடம் சொன்னேன். செல்லமாய் அதட்டிவிட்டு. உன் பாதுகாப்பு முக்கியம். பார்த்து பழகு. பெண்களை அவ்வளவு எளிதாய் நம்பி விடாதே. எல்லாம் இந்த வயதில்தான் செய்ய முடியும். அனுபவி. ஆனால் உன் சுயம் முக்கியமென்று சொன்னார்.

அதன்பின் வீடியோசாட் வரை இவளோடு வந்துவிட்டேன். மாமாவிடம் சொல்லவில்லை.

இவள் நான் என் முன் விளையாட்டுகளை சொல்லும்போதெல்லாம் பயங்கர வெட்கப்படுவாள். Licking பற்றி சொன்ன போதெல்லாம் ச்சீ கருமம் என்று நிராகரித்தாள். Sucking பற்றிய விளக்கத்தை இதுவரையிலும் அவளுக்கு விளக்க முடியவில்லை. அதனால் sucking portion முழுவதும் கட். அவள் எனக்கு முத்தம் மட்டுமே அளிப்பாள். அவளுக்கு தெரிந்த காமம் என்றால் "மாரை கசக்கி கொஞ்சம் சுவைத்து விட்டு குறிகளால் புணர்வது மட்டுமே". இத்தனைக்கும் கல்லூரி வரை படித்தவள்.. திருமணமாகி இரண்டு வருடம் முடிந்திருக்கிறது. இன்னும் குழந்தையில்லை.
Photo
ஒரு நாள் என்னோடு சாட் செய்து கொண்டிருக்கும்போது இரு வரேனென்று போனாள். "வெறும் ஏழு செகண்ட்தான். முடிந்து விட்டது. அவ்வளவுதானா காமம்?... அவருக்கு அதற்கு மேல் தாக்கு பிடிக்காது என்றாள்... கேட்கவே பாவமாயிருந்தது. அவளை நிராகரிக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் வைத்திருக்கிறேன்.

அவளுக்கு எந்த குறையும் இல்லையாம். கனவனை செக் அப்பிற்கு அழைத்தால் மாட்டேன் என்கிறாராம். சமீபத்தில் "parched" படம் பார்த்திருக்கிறாள். அதில் வரும் ராதிகா ஆப்தேவை போல என்னிடம் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்கிறாள்.

நான் இதை மாமாவிடம் சொன்னேனென்றால். என்னை கொன்றே விடுவார் என்பதால். சொல்லவில்லை.

பிறகு பேச்சை தொடங்கினேன்.

மாமா "நம்ம ஊர் பொம்பளைங்களுக்கு எதுவரை மாமா Foreplay தெரியும்?"

சிரித்தார். சகஜ நிலைக்கு வந்து பேச ஆரம்பித்தார்.
"ஆனால் எனக்கு தெரிந்து பல பேருக்கு பாதி காமம் கூட தெரியாதுடே. லிக்கிங்க் என்ற சுகத்தையே அனுபவிக்காமல் நம் நாட்டு பெண்கள் வாழ்ந்து சாகிறார்கள். நீ parched படம் பாத்திருக்கியா ? அதில் குழந்தைக்காக ஒருவனை அணுகும் ராதிகா ஓடிப்போய் மல்லாக்க படுத்து பாவடையை மட்டும் தூக்குவாள். ஏனென்றால் அவளுக்கு தெரிந்த காமம் அதில் மட்டும்தான் இருந்திருக்கிறது. அது அனிமல் செக்ஸ்டா. மனுசனோட கலவி பல நிலைகளை கொண்டுள்ளது. "காமசூத்ரா" என்றொரு புத்தகமே இருக்கிறதென்றால் பார்த்து கொள் காமம் எவ்வளவு பெரிதென்று."

உனக்கு கல்யாணம் ஆக போற சமயத்துல காமசூத்ரா புக் தரேன். ஒரு நாளைக்கு ரெண்டு பக்கம் படிச்சு வித்தைய கத்து விளையாடு.

இப்ப வந்துட்டு போனாளே திவ்யா. அவ புருசன் பாவம்டா. வெளிநாட்டுல குடும்பத்துக்காக உழைக்கிறான். இங்க இவ இப்டி ... ஆனா இவளையும் குறை சொல்ல முடியாது . கல்யாணமான மூனு மாசத்துல விட்டுட்டு வெளிநாடு போனா இவ என்ன பன்னுவா?. எவ்வளவு கட்டுப்பாடா இருந்தாலும் முடியாதுடா. இங்க நம்ம ஊர்ல பலபேர் தம்பிக்காகத்தான் கல்யாணம் பன்றானுங்க. அதுலயும் சில பேர் தம்பிதானே என்றெல்லாம் ஆறுதல் மயிர் வேறு.... ஒன்னு சம்பாரிச்சிட்டு கல்யாணம் பன்னனும். இல்லனா பொண்டாட்டிக்கு அந்த எண்ணத்தை வர விடாம புருசன் மேல ஒரு பிடிப்பை உண்டாக்கி தளர விடாம வச்சிக்க தெரியனும். கடமைக்கு கல்யாணம் பன்னி ஊர ஓ*** விட்றானுங்க.

புருசன் இருந்தும். ஒருத்தி பலபேரோட போறான்னா. அவளை அவ புருசன்லேருந்து ஒரு மயிரானும் முழுசா திருப்தி படுத்தலனு அர்த்தம். எவனாவது அவளுக்கு முழுசா திருப்தி படுத்தினான்னா அவனை விட்டு அவ்ளோ சீக்கிரமா போக மாட்டா.

பேசி முடித்து தம்மை பற்ற வைத்தார். ஏன் மாமா நீ இப்போ திவ்யா அக்காவை வச்சிருக்கிறது தப்பில்லையா என்று கேட்டேன். புன்னகைத்து கொண்டே என்னை பார்த்தார்.

நான்தான் அப்பவே சொன்னனேடா காமத்தை அடக்கி வைக்க முடியாதுனு. மஞ்சு இல்லாத வாழ்க்கை பயங்கர வெறுமை. காதல் கல்யாணம் எல்லாம் என் வாழ்க்கைல இனி இல்லவே இல்ல. அவ என்னை ஏமாத்திட்டு போயிருந்தா கூட சமாதானம் ஆகிருப்பேன். ஆனா எனக்காக செத்துப்போயிட்டாடா.....

அவ்ளோதான் என் வாழ்க்கை. ஆனா காமம் உடம்போட பசி. அதை அடக்குறது கஷ்டம். சோறு தண்ணி போல காமமும் பச்சையான ஒரு உயிர்த் தேவை. என்னதான் பத்தினியா இருந்தாலும் ஏதோ ஒரு புள்ளில அவ தடுமாறுவா அந்த தடுமாற்றத்தை சரியா யூஸ் பன்னிதான் இங்க என்னை போல பல அன்னக்காவடி பயலுக வாழுறானுங்க. அவளுகளோட சூழ்நிலையை எங்களுக்கு சாதகமாக்கி வாழுறோம். அதான்.
உனக்கும் சொல்றேன் பொண்டாட்டிக்கு படுக்கையில சம உரிமை குடு. இந்த மாதிரி இப்பவே சாட் மயிறுனு நாசமா போவாத அப்ரம் கல்யாணமான கொஞ்ச நாள்ல சலிச்சு போயிடும். உன் பொண்டாட்டி ஊர மேய போயிடுவா.

சுரீரென என் மண்டையில் உரைத்தது மாமா பேசி முடித்த கடைசி சொற்கள். "உன் பொண்டாட்டி ஊர மேய போயிடுவா"....
எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது. மொபைலை கெட்டியாக பிடித்து கொண்டேன். மாமா எழுந்து போய் ஒன்னுக்கு அடித்துவிட்டு வந்தார்.

இந்த பேச்சு மேலும் தொடர எனக்கு விருப்பமில்லை. பேச்சை காமெடியாக்க நினைத்து வழக்கம்போல என் சிறுபிள்ளைத்தனமான கேள்வியை கேட்டேன்.

"மாமா .... பல பேர் விட்ட இடத்துல ஒருத்தன் எப்டி மாமா நெருடலா இல்லாம வாய் வைக்கிறான்? " என்றேன்.

அடேய்....நாரப்பயலே என்று வாய்விட்டு சிரித்து என் முதுகில் தட்டினார்.....
Photo
ஆனாலும் அந்த காமெடி பேச்சு முடிந்த சில நொடிகளிலேயே மாமா சொன்னது மீண்டும் மீண்டும் வந்து காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது. இப்போது வரையிலும் எதை எதையோ எதில் எதிலோ எண்ணத்தை செலுத்தி பார்க்கிறேன். மாமா சொன்னது என் காதை விட்டு அகலவே இல்லை...!
Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)