Thursday, August 3, 2017

சிந்தனைத்துளிகள்

வார்த்தை என்பது உயிர்ப்புடன் கூடிய எண்ணங்களின் போர்வை. சூழலுக்கும், காலநிலைக்கு தக்கவாறும் அவற்றின் இயல்பும், பொருட் செறிவும் மாறும்…

01. வாழ்க்கை என்பது கோடுகளால் கட்டங்கள் போடப்பட்ட மாயப் பெட்டி ஒன்றுக்குள் ஓடுவதைப் போன்றது. நடு வழியில் சரியான பாதை எதுவென்று தெரியாத குழப்பம் ஏற்படும். அதைப்பார்த்து பயணத்தை நிறுத்திவிடாதே.. தொடர்ந்து நட ஒரு கட்டத்தில் சரியான பாதையைக் கண்டு பிடிப்பாய்..

02. ஒரு செய்தி உண்மையாக இருந்தாலும் அதை மற்றவருக்கு உன்னால் பிரியமாகச் சொல்ல முடியாவிட்டால் உண்மையைக் கூட சொல்லாதே. ஆம்..! உண்மையைச் சொல் பிரியமாகச் சொல்.
Photo
03. கேட்பதற்கு பிரியமாக இருந்தாலும் உண்மை இல்லாததை சொல்லாதே. அதேவேளை அன்பாக சொல்..! இல்லாவிட்டால் சொல்ல வேண்டாம்.

04. மற்றவனுடன் உன்னை ஒப்பிட்டு பார்க்காதே.. அவன் வேறு நோக்கத்திற்காக பிறந்திருக்கிறான், நீ வேறு நோக்கத்திற்காக பிறந்திருக்கிறாய். இரண்டு மனிதர்களை ஒரு நோக்கத்திற்காக படைக்க கடவுள் முட்டாள் இல்லை.

05. எதையும் உன் தன்மானப் பிரச்சனையாக பார்க்காதே.. என்று நீ ஒரு விடயத்தை தன்மானப் பிரச்சனையாகப் பார்க்கிறாயோ.. அன்றே உன்னில் ஏதோ பிழை இருப்பதை உணர்ந்து கொண்டு, உன்னைத் திருத்திக்
கொள்.

06. எதையுமே தன்மானப் பிரச்சனையாக்கி சீரியசாக எடுத்து, பகை மூட்டத்தை கிளப்பாதே.. ஏனென்றால் சீரியஸ் ஆனவர்கள் போக வேண்டிய இடம் வைத்தியசாலை.. நீ சிம்பிளாக இரு.. சிக்கல்களை வெல்ல அதுவே மருந்து.

07. சாகும் நேரத்தில் சங்கரா.. சங்கரா.. என்று கடவுளின் துணையை நாட வேண்டிய ஒருவன் வாய் தடுமாறி, கிங்கரா கிங்கரா என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் உயிரை கிங்கரனான எமன் விரைந்து வந்து எடுத்துச் சென்றான். வார்த்தைகள் தப்பாக வந்தால் தப்பானதே வாழ்வில் நடக்கும். மற்றவருடன் உன்னை ஒப்பிடுதல், சீரியஸ்சாக இருத்தல், தன்மானம் பார்த்தல் ஆகிய மூன்றும் தப்பான வார்த்தைகள் கிங்கரனை அழைக்கும் தீய மந்திரங்கள்.

08. எய்த அம்பு.. வீணாகக் கழித்த காலம்.. தப்பான சொற்கள் ஆகிய மூன்றும் திரும்பி வர முடியாதவை. இவை மூன்றும்; அம்பு போன்றவை, எய்துவிட்டால் திரும்பப் பெற முடியாது.

09. நெஞ்சில் சுமக்காத எண்ணங்கள் ஒரு போதும் நிஜமாக செயற்படப்போவதில்லை. முன்னேற்றத்தை முனைப்பாக நெஞ்சில் நிறுத்தாத எவரும் இறுதி வெற்றி பெறமாட்டார்கள். கெட்ட வார்த்தைகளை உன் நெஞ்சில் பாதுகாத்தால் அவை உன் நெஞ்சை அந்த வார்தைகள் போலவே அழுக்காக்கும் என்பதை உணர்ந்து கொள்.

10. எப்போதுமே உழைப்பை தன் பாதியாக வைக்க வேண்டும் என்பதால்தான் சிவன் சக்தியை தன் பாதியாக வைத்தான். உழைப்புப் பாதி, சிரிப்புப் பாதி இல்லாவிட்டால் சிவனே இந்த உலகில் இருக்க முடியாது என்பதே இதன் பொருள். பென்சன் எடுத்துவிட்டு சிவன் கோயில் போய் சிவனே என்று இருக்க எண்ணாதே.. உழைக்காமல் கோயில் போய் நீ சிவனாக முடியாது.

11. உழைப்போர் ஊழையும் உப்பம் காண்பார் என்பார் வள்ளுவர். உங்களுக்கு கஷ்டகாலமானாலும், நாடு கஷ்டத்திலிருந்தாலும் நீ உழைத்துக் கொண்டே இரு.. துயரம் ஒரு நாள் பறக்கும்;.
Photo
12. வானம் வசப்படுவதன் ஆரம்பம் வார்த்தைகளில், அது ஆலமரமாக வேரூன்றி வளர்வது ஆழ் மனத்தில், முற்றுப் பெறுவது உழைப்பில். படைப்பாக்கமில்லாத நாக்கு நம்மை அழிவுக்கு ஆளாக்கும் ஆகவே அதைப் பயன்படுத்தாதே.

13. அறிஞர்களை பார்த்து நீ தீய வார்த்தைகளை பேசினால் அவர்கள் உனக்கு பதில் கூறாது அமைதியாக போவது ஏன் என்று கேட்கிறாயா..? தீய வார்த்தைகளை திருப்பி எய்து வீழ்ச்சியடைய எந்த அறிஞனும் விரும்பமாட்டான்.

14. நம்பிக்கையான உடன்பாடான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நெஞ்சு வேண்டும். அது இல்லாவிட்டால் அத்தகைய நெஞ்சில் இருந்து இலக்குமி வெளியேறிவிடுவாள். இலட்சுமி வெளியேறினால் அந்த வெற்றிடத்தில் இயல்பாகவே வறுமை குடியேறும்.

15. உழைக்க உழைக்கத்தான் சக்தி அதிகரிக்கும். உழைக்காத உடலுக்கு சக்தி தேவையில்லை.. அந்த உடல் சிவம் என்ற நிலையில் இருந்து விடுபட்டு விரைவாக சவமாக மாறும்.

16. அம்பறாத்துணியை முதுகுக்குப் பின்னால் வைத்திருப்பதன் நோக்கம் அது கண்களில் படக்கூடாது என்பதற்காகத்தான். நமது நாக்கும் அம்பறாத்துணி போன்றதுதான் அதை முன்னிறுத்தி வாழக்கூடாது.

17. உயிர்களை ஆதரிக்கும் இல்லங்களில் நல்ல வார்த்தைகள் வரும், அதேவேளை உயிர்களை கொன்று விற்கும் கறிக்கடையில் ஏன் காதுகளால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் வருகின்றன என்று எண்ணிப்பார். கெட்ட வார்த்தையும், கொலையும் எப்போதுமே பக்கம் பக்கமாக இருக்கும்.

18. அம்புபோலவே வார்த்தைகளும் அவை எதற்காக எய்யப்பட்டனவோ அந்த இலக்கைத் தொடும். மலரை சொரிவதும் வார்த்தைகள் மனிதனை மாய்ப்பதும் வார்த்தைகள். சரியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி. ஆகவே எய்யும்போது கவனமாக எய்..!

19. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு – ( திருக்குறள் 374 )
நமது மூளை வலது இடது என்று இரண்டு பக்கங்களாகத் தொழிற்படுகிறது. இடது பக்கம் ஆதிக்க மூளை, வலது பக்கம் அருளியல் மூளையாகும். இந்த இரண்டும் வேறு வேறு அளவில் வேறு வேறு பணிகளை செய்கிறது என்று கண்டு பிடித்து 1950 ல் ரோகர் ஸ்பெர்ரி என்பவர் நோபல் பரிசு பெற்றார். இதைத்தான் மேலேயுள்ள குறளில் அவருக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வள்ளுவர் கூறுகிறார். மூளைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு, ஒன்று அருள் மற்றது பொருள் என்பது இதன் கருத்து. ஆகவே திருக்குறள் போன்ற நூல்களை படித்து பயனடைவது வாழ்வில் வெற்றிபெற மிக அவசியமாகும்.

20. மூளையின் வழியேதான் நமது இன்பங்கள், மகிழ்ச்சி, சிரிப்பு, சந்தோஷம், துயரங்கள், வலிகள், துக்கம், பயம் ஆகிய அனைத்தும் தோன்றுகின்றன. – இது ஐந்தாம் நூற்றாண்டில் கிப்போகிரட்டிஸ் கூறியது. ஆகவே மூளையை பாதுகாத்துக் கொள்.
Photo
21. 1932 ல் பிரிட்டனைச் சேர்ந்த எட்கர் ஆல்ரின் மூளையின் மின் இயக்கத்தை ஆராய்ச்சி செய்து, அதை அளந்து காட்டியதற்காக நோபல் பரிசு பெற்றார். அவருடைய அளவீட்டின்படி மூளையானது நான்கு விதமான மின்னலைகளை எழுப்பும்.
👉. ஆழ்ந்த உறக்கத்தில் 1 முதல் 4 வரை மின் ஆற்றல் அலைகளை எழுப்பும். இது டெல்டா அலைகள் எனப்படும்.
👉. தூங்க ஆரம்பிக்கும்போது 4 முதல் 7 வரை மின் ஆற்றல் அலைகளை எழுப்பும். இது ரீற்றா அலைகள்.
👉. உடலும், மனமும் ( றிலாக்ஸ் ) தளரும் போது 7 முதல் 14 வரை மின் ஆற்றல் அலைகளை எழுப்பும். இது ஆல்ஃபா அலைகள் எனப்படும்.
👉 நாம் உலகியல் நடவடிக்கையில் ஈடுபடும் போது 14 முதல் 21 வரை மின் ஆற்றல் அலைகளை எழுப்பும். இது பீற்றா அலைகள் எனப்படும்.
இந்த அளவில் 07 முதல் 14 வரைதான் இடது மூளையும் வலது மூளையும் இணைந்து பணியாற்றும். வள்ளுவர் கூறிய அருளியலும் உலகியலும் சமநிலையில் இருக்கும் இடம் இதுதான். பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு சிறந்த வாழ்வு பெற இதுவே சரியான அளவாகும். இதுவே சமுதாயத்திற்காக வாழும் சிறந்த வாழ்வாகும்.
மேலும் மின் அதிர்வானது 14 ற்கும் மேலே போனால் நாயிலும் கடைப்பட்ட மனிதராக வாழ நேரிடும். ஆசை, கோபம், குரோதம், சுயநலம் எல்லாம் நிறைந்த வாழ்வு வரும், அதுவே விரைவு மரணத்திற்கான மாத்திரை.
இத்தனை கண்டு பிடிப்புக்களையும் ஒரேயொரு திருக்குறளில் ( 374 வது குறள் ) சொல்லிப் போன வள்ளுவன் ஒரு தமிழன் அவனை நீ எவ்வளவு படித்திருக்கிறாய் என்று எண்ணிப்பார்.

22. நமது உடலின் முக்கிய வேலையே கிடைத்திருக்கும் அற்புதமான மூளையை சுமந்து கொண்டிருப்பதுதான். அதை உணராது, ” வெற்று உணர்வுகளை சுமக்கும் வாகனமாக உடலைப் பாவிப்பது சரியா..? ” என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

23. அளவுக்கு அதிகமாக மரம் கிளைகளை விட்டு வளர்ந்தால் என்ன செய்வாய்.. வெட்டி விடுவாய். அதுபோல ஆசைகளும் அளவுக்கு அதிகமாக வளர விடக்கூடாது, வெட்டிவிட வேண்டும். அதுபோல முட் செடிகளுக்கு நீர் ஊற்றக் கூடாது.

24. வீட்டின் சன்னலை திறந்து வைத்தால்தான் அழுக்குக் காற்று வெளியேறும், புதிய காற்று உள்ளே வரும், அதுபோல இதயத்தின் பூட்டிய கதவுகளை திறந்து விடவேண்டும் ஏனென்றால் புதிய காற்று அப்போதுதான் வரும்.
Photo
25. பீட்டர் ரஸ்ஸல் என்ற அறிஞர் இந்தப் பூமியை ஒரு பேருயிரி என்று கூறுகிறார். காரணம் பல்வேறு உயிரினங்களை அது தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த உலகத்திற்கு பூவுலக மனம் என்று ஒரு மனம் இருக்கிறது. அதுபோல பிரபஞ்சத்திற்கு பிரபஞ்ச மனம் என்று ஒரு மனம் இருக்கிறது. மேலும் உயிர்களால் நிறைந்த உலகத்திற்கு ஒரு மூளையும், மனமும் இருக்கிறது. இந்தப் பேருயிரியின் மனத்தின் ஒரு பகுதியே நமது மனம். ஜப்பானில் சுனாமி வடிவில் வந்து, அணு சக்தி மையத்தை அடித்தது புவியின் கோப மனமே. எனவேதான் நாம் உலகத்தை ஏமாற்றக்கூடாது என்கிறார்கள் நல்ல மனமுள்ள அறிஞர்கள்.
Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)