Sunday, August 13, 2017

மாணவப் போர் - வாழ்க்கை ஒரு போர்க்களம்

"யாராயிருந்தாலும் அடித்துவிட்டு வா, அடி வாங்கி கொண்டு வராதே" -என் அப்பா எனக்கு சொன்ன வேதவாக்கு.

ஊர்ல எல்லாருமே எனக்கு பயப்படுவானுங்கடே எல்லாத்தையும் சமாளிச்சிருவேன். இந்த மம்பட்டியான் மட்டும் என்ன விட கொஞ்சம் "தாக்கான" ஆளு. அவன சமாளிக்க முடியாது- --பெரியப்பாவின் வீர கதைகள்.

சித்தப்பா கிடுக்குப்பிடி, கராத்தே குத்துகளின் நுணக்கங்கள்- கையில் கிடைத்தவைகளை வைத்து எப்படி சண்டையை சமாளிப்பது என்று அவ்வப்போது சொல்லி தந்து வியப்பூட்டுவார்.

ஆம்பிள புள்ள கையில கழுத்துல கயிறு கட்ட கூடாது. ஏன்னா எதிரி கையில வாட்டமா எதும் சிக்கிட கூடாது பாத்துக்க. கட்டிப்புடிச்சியெல்லாம் புரள கூடாது, சிண்ட புடிச்சி தூக்கி அடிக்கிற அளவு நெஞ்சுல தேட்டை வேணும். நல்லா சாப்ட்டு ஒடம்பு ஏத்துடா. நோஞ்சான் மாதிரி உடம்புல ஒட்டுச்சதை இல்லாம கெடக்க. - அப்பா சொல்றது.
----
Photo
ஒன்றிரண்டு இடங்கள்ல சமாளிக்க முடியாம என்னை விட உடம்புல பலசாலியான பயலுகக்கிட்ட அடி வாங்கிருக்கேன்.

அடிக்க முடியுதோ இல்லியோ அடிக்க தயங்க கூடாது- என்னோட பாலிசி. தளபதில தேவா ஆட்களோட மழை சந்திப்புல அந்த ஒரு வசனம்-எனக்கு ரொம் புடிச்சது.
பத்துப்பேர்ல ஒருத்தன கூடவா அடிக்க முடியாது. ......
இருந்தும் ஒரு இக்கட்டான நிலைல எகிறாம அடிவாங்கி பணிஞ்ச வந்த சம்பவமும் உண்டு.

நான் இப்டியெல்லாம் சண்டை போடனும்னு எனக்குள்ள அமைச்சு வச்சிருக்க வியூகங்களை ஒரு தடவை கூட உபயோகிச்சதில்லை.

ஊர்ல படிச்ச எட்டுவருசத்துல கிரிக்கெட் சார் கலவரம் அதிகம். எங்க ஊர் ரொம்ப ரொம்ப சின்ன ஊர். SC vs BC இரண்டு கிரிக்கெட் டீம்தான். அதில் பெரியவர் சிறியவர் என்ற பிரிவுகள் உண்டு. இந்ந சமூக வாரியிலான பிரிவு என்பது குடியிருக்கும் பகுதியை வைத்துதானே ஒழிய வேறொன்றுமில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் "ஏரியா" டீம்களை போல.
ஒருமுறை எங்கள் பெரிய டீமில் ஒரு மாமா ஃபோர் லைனிலிருந்து ஒடியாந்து கையை மடித்து முகத்தில் ஒரு ஏத்து ஏத்தினார். அடிவாங்கியவர் சுருண்டு விழுந்தார்.

சண்டையென்றால் சட்டையை கழட்டிவிட்டு ஓடுவோம். பயல்கள் தூண்டிவிட்டால் ஆர்கஸமடைந்து குதிக்கும் ஆர்வக்கோளாறு நான். அப்படியிருந்தும் அவ்வளவாய் எந்த ஒரு அடிதடி சம்பவமும் நடந்ததாய் நினைவிலில்லை.
அவ்வப்போது சிலபல தனிமனித சண்டைகள். அவன்களும் அவ்வளவாய் ஒர்த் பீஸ்கள் இல்லை.
Photo
பிறகு 9&10. பாட்டி ஊரில் படித்தேன். அங்கு என்னோடு சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் எங்கள் ஊர் +க்ளாஸ்மெட் பயல்கள். அதில் ஒன்றிரண்டு கழண்ட கேஸ்களை விட்டு பார்த்தாலும் ஆறேழு பேர் தேறும். ஆனால் நான் பாட்டி வீட்டில் தங்கி படித்தேனென்பதால் பள்ளிக்கூடத்தினுள்தான் நண்பர்களை பார்க்க முடியும். தினமும் ஊருக்கு போய் வரும் மாணவர்கள் மற்ற எட்டு பேரும்.
எங்களிடம் வம்பிழுத்த அந்த ஊர்ப்பயல்கள் பிரச்சனை, பிரச்சனைக்கு முடிவாய் கபடி+கிரிக்கெட் -எதிலுமே எனக்கு வாய்ப்பமையவில்லை. ஒரே ஒருநாள் பேச்சு வார்த்தைக்கு அழைத்து போனார்கள்.
பிறகு ஏதும் சொல்லிக்கொள்ளும்படி சம்பவமில்லை.

+1&+2 அத்தை மகன் பெரியவன் எனக்கு சீனியர் (+2)&(நான் +1) ...அவனுக்கு அவனோட ஊர் நண்பர்கள் மூவர். என் பின்னணி பலம். ஆகையால் எனக்கு எந்த விதத்திலும் வாய்ப்பில்லை. ஒருமுறை என் மாமன் அவனது வகுப்பு தலைவனை அடித்ததால் அவன் வாத்தியாரிடம் சொல்லி மாமனுக்கு அடி... அன்று இரவு விடிதிக்கு என் மாமன் வெகுநேரமாகியும் வரவில்லை.
பெரம்பலூரில் சங்குப்பேட்டை மற்றும் திருநகர் என்ற இரு ஏரியாக்களும் பரம எதிரிகளாம். என் பள்ளியிலேயே சீனியர் மாணவர்கள் ஒருமுறை பயங்கர "கேங்க் வார்" செய்தார்கள். கத்தியை பிடித்தோடியவனை கண்கூடாக பார்த்தேன்.
அப்படிப்பட்ட சங்குப்பேட்டை ஏரியாக்காரன்தான் என் மாமன் அடித்த ஆள்.
விடுதியில் மாமனுக்கு சாப்பாடு வாங்கி வைத்துவிட்டு , பேண்ட்ட் சட்டை போட்டு நான் நம்பும் என் மிகப்பெரிய ஆயுதமான பெல்ட்டை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.
எப்படியெல்லாம் சண்டையிட வேண்டுமென வியூகங்களை மனதில் வகுத்துக்கொண்டு என் மாமனை தேடி அந்த முன்னிரவில் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தேன்.
ஒரு வெளிச்சத்தில் அமர்ந்து மும்முரமாக படித்து கொண்டிருந்தான்.ஏமாற்றத்தோடு அழைத்து வந்தேன்.

ஒரு தனிமனித சண்டையில் ஒருவனை எட்டி உதைத்து கட்டிப்புரண்டு எழுந்து அடிக்கும்போது "அட்றா பாஸ்ஸு அட்றா....." என்று என்னை உற்சாகப்படுத்தினான் என் உயிர் நண்பன் ஒருவன்.
பிறகு விடுதி கேங்க் பிரிவினையில் பொதுத்தேர்வொன்றின் முந்தைய நாளிரவு ஒருவன் குடித்துவிட்டு சண்டைக்கு வந்தான். அவனை முன்னமே அடிக்கவேண்டுமென சொல்லியிருந்தேன் அது அவன் காதுக்கு எப்படியோ போக "அடிப்பேன்னு சொன்னியாமே அடி" என்று வந்தான் என் முன்னாலும் அவன் முன்னாலும் தடுக்க பத்து பேர்.தீவிர சமாதானத்தில் என் மச்சான் என்னை திட்டி அனுப்பிவிட்டான். வந்த வாய்ப்பை ஒருமனதாக நழுவ விட்டேன். பிறகு TC வாங்க பள்ளிக்கூடம் போன ஒருநாள் அந்த வீரனை பார்த்து லேசாய் ஒரு புன்னகை.

கல்லூரியில் மறக்க முடியாத சம்பவமென்றால் இந்த சம்பவம்தான். அந்த பெண் தன் தெருவில் ஒருவனை காதலித்திருக்கிறாள்(டவுட்) எங்கள் விடுதியில்(My batch) ஒருவன் அந்த பெண்ணிடம் பேசி ஓரளவு கொண்டு வந்திருக்கிறான். இந்த விசயம் அந்த பெண்ணின் தெரு(காதல்) பையனுக்கு தெரியவும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறான். நாங்கள் ஒரு பத்து பேர் டெம்போவில் ஏறி பன்ருட்டிக்கு போனோம். அங்கு பஸ் ஸ்டாண்டிலிருந்து அந்த தெருவுக்கு திரும்புகையில் போலிஸ் கும்பல் ஒன்று நின்றது. பீதியில் எங்களுள் கழல ஆரம்பித்தனர்.களத்தை நோக்கி அழைக்க வந்த லோக்கல் பயல்களை பின்தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு டீக்கடையிலும் முக்கிலிருமிருந்து பல்க் பல்க்காக ஜிம் பாடிகள் வெளியேறி ஒவ்வொருவராய் எங்களுக்கு அரணமைத்து பின் தொடர்ந்தார்கள். முழு பீதியடைந்த, நான் எதிர்பார்க்காத சில நபர்கள் பின் வாங்கி ஓடினார்கள்.
Photo
கடைசியில் சம்பவக்காரனோடு நாங்கள் மூவர்தான் நேருக்கு நேர் நின்று பேச்சுவார்த்தையை நடத்துகிறோம். அதில் என் பங்காளியின் நண்பனுக்கு தெரிந்த லோக்கல் ஆட்கள் வந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள். உண்மையிலேயே அந்த சமாதானம் நிகழவில்லையென்றால் அன்று எங்களால் அவர்களை சமாளித்திருக்க முடியாது என்பதே உண்மை.

பிறகு எப்படியோ கிளம்பி காட்டுவழியே நுழைந்து வந்து அடுத்த நாள் செமஸ்டர் தேர்வுக்கு படித்தோம்.

90% கல்லூரி கேங்க் வார் என்பது பெண்ணை பிரதான படுத்திதான் நிகழும். அப்படி என் நண்பன் ஒருவனுக்கு லோக்கல் பையனுடன் ஏற்பட்ட பங்காளி தகராறு என் கண்முன் நடந்த வன்முறை. பேச அவனை தனித்து அழைத்து சென்றவர்கள் பொத் பொத்தென அடித்தார்கள். பின் தொடர்ந்து போன நான் ஓடி நெருங்குவதற்குள் நண்பனுக்கு சிலபல அடிகள் வலுவாய் விழுந்தன. தடியெடுத்து வந்தவனை மடக்கி பிடித்து தடியை பிடுங்கி வெறுமனே நின்று விட்டேன் என்பது பலநாட்கள் என்னை உறுத்தியது. ஏனென்றால் என் கையிலிருந்தது நல்ல வலுவான தடி. எடுத்து சுழட்டினால் விரட்டியிருக்கலாம். அடிவாங்கும் நண்பனை மீட்பதிலேயே எண்ணமிருந்துவிட்டது. பிறகு அந்த பங்காளி தகராறு பலமுறை நான்கு வருடமும் நீடித்தது. மூன்றாம் வருடத்திலேயே அந்த நண்பனை விட்டு விலகிவிட்டேன்.

டிபார்ட்மெண்ட் தகராறில் சீனியர் அண்ணன்களோடு முன்வரிசையில் நின்றேன். அண்ணன்கள் வாக்குவாதமும் சமாதானமும் .... கைகலப்பு பெரிதாய் நிகழவில்லை. பெருமிதம் ஆனால்,
எனக்கும் வாய்ப்பு அமையவில்லை.
Photo
கல்லூரி "கல்ட்சுரல் திருவிழா" ஒரு யுத்தக்களம். பௌர்ணமிக்கு பாம் வைக்கிறோம் என்ற பழைய பட சீன்களை போல கல்ட்சுரல் அன்று யுத்தத்தை அமைக்க முன் வியூகங்கள் உண்டு. யுத்த காரணம் அதற்கு முந்தைய வாரத்தில் நடந்த விளையாட்டு போட்டிகள். என் இறுதியாண்டு கல்ட்சுரல் திருவிழாவில் பயங்கர சண்டை நடந்தது. ஓட ஓட விரட்டி அடித்தார்கள். சீனியர் ஜூனியர் -டிபார்ட்மெண்ட் என்று பல ரூப உட்பூசல் மற்றும் பிரதான காரணமாக ஒரு பெண் ..... இந்த தகராறில் எனக்கு உடன்பாடில்லை, மேலும் எங்கள் பயல்களுக்குள் விளையாட்டு தேர்வு துரோகமென கருதியதாலும் நான் ஓதுங்கிவிட்டேன். அடிக்க ஓடும்போது ஒருவன் "என்ன மச்சான் இப்டி சண்டை நடக்குது கண்டுக்கவே மாட்ற" என்று கேட்டேன். புன்னகைத்து கடந்தேன்.

இந்த தகராறு ஒருபுறம் நடக்க. இடையில் என் பங்காளி தன் பரம எதிரியை அடித்து விட்டதாய் சொல்லி ஆர்வமாக சிரித்துக்கொண்டே கிழிந்த சட்டையோடு வந்து என்னை கட்டிப்பிடித்து "இங்க பார் பங்காளி வாயிலயே ஏத்தினேன் என்று தன் புறங்கையை காட்டினான்" கட்டிப்பிடித்து பாராட்டினேன்.

சண்டை முடிந்தும் லோக்கல் ஆட்களை வரவழைத்து எங்கள் பயல்களின் ரூமுக்கே சென்று மிரட்டியுள்ளார்கள்.மிரட்டல் வாங்கியதில் என் மாப்பிள்ளை ஒருவன் இருந்தான். மிரட்ட சொன்னவன் என்னோட நன்கு பழகிய ஜூனியர் ஒருவன். பிறகு அந்த ஜூனியரோடு பேச்சு வார்த்தையை தவிர்த்தேன்.

கல்லூரியில் என் முதல் உயிர் நண்பன், பெரிய உறவு என்றால் அது என் பங்காளிதான். ஒரே ரத்தம்போல எங்கள் பழக்கம். கிட்டத்தட்ட எங்கள் கல்லூரியின் சண்டியன் அவன்தான். எங்கெங்கிருந்தோ வம்புகளை சம்பாரிப்பான் அதை அவனாகவே சமாதானமும் செய்து விடுவான். ஒருநாள் மதிய வேளையில் "பங்காளி என்னை அடிக்க ஆள் வரானுங்கடா என்று சொன்னான்" நிட்சயமாக எனக்கான களம் இதுதான் என்று நம்பினேன். கிரிக்கெட் ஸ்டம்புகள், ஹாக்கி ஸ்டிக், இரும்பு ராடுகள் என்று ஆளாலுக்கு ஆயுதத்தோடு ஒரு நான்கைந்து பேர் தயாரானோம். பங்காளியை இப்போது கால்செய்து ஆட்களை இறக்க சொல் என்றேன். வெகுநேரமாய் காத்திருந்து ஏமாந்தோம்.ஆனால் அதே நாளில் என் பங்காளியின் நண்பர்களை அடிக்க ஆள் வந்து வன்முறை நிகழ்ந்திருக்கிறது.

எனக்கு தனிமனித சண்டையென்றால் இரு வலுவான சம்பவம் உட்பட சில பூட்ட கேசுகளோட நடந்திருக்கின்றன.
Photo
அப்பா அடிக்கடி சொல்லுவார் சண்டையிட போலாமே ஒழிய சண்டையை விலக்க போக கூடாது. மத்திம தன்மையில் நிற்கவும் கூடாது அதேபோல தேவையின்றி ஒருவனுக்காக நின்று சமாதானமும் செய்யக்கூடாது.

இன்று வரையிலும் என் பெர்ஃபாமென்ஸ்களை இறக்க ஒரு நேர்த்தியான களம் கிடைக்கவே இல்லை.

என்போல பசங்களுக்கு ஒரு அறிவுரை.
இடுப்பு பெல்ட் என்பது நம்மிடமிருக்கும் மிகப்பெரிய தற்காப்பு ஆயுதம். அதை மிருதுவாக லேசான தோல்களால் ஸ்டைல் என்றெல்லாம் அணியாதிர்கள் நல்ல தரமான லெதர் பெல்ட்டுகளை அணியுங்கள். இடது கையில் நகம் வளர்க்கலாம்.

சண்டை போடுவதை விட சண்டைக்கு தயாராயிருத்தலே மிகப்பெரிய தைரியம். சண்டைக்கான காரணம் பெண்ணெறால் தீவிர ஆலோசனை வேண்டும் ஆர்வக்கோளாறில் இறங்கிவிடக்கூடாது. பெண்களை நம்பி மட்டும் கேங்க் வாரில் கலந்து கொள்ள கூடாது...!

Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)