Monday, February 23, 2009

நிழல் கிரகங்கள் இரண்டு

இந்திய
ஆன்மீக தேற்றத்தில் எண்ணற்ற கட்வுளர்கள். மனித உருவில், ஆண்- பெண்
தெய்வங்களாக மட்டுமல்லாமல், அந்த ஒவ்வொரு கடவுளுக்கும் தனிதனியே வாகனங்கள் என்ற
பெயரில் விலங்குகள் என ஒரு வித்தியாசமான காட்சியை பார்க்க முடிகிறது.
உலக மதங்களில் எந்த கண்டத்திலும் இல்லாத் அளவுக்கு நம் ஆன்மீகத்தில்
விலங்குகளுக்கான முக்கியத்துவம் அளவிடற்கரியது.
பசு முதற்கொண்டு பல்லி, தவளைவரை அனைத்துக்குமே ஆன்மீக முக்கியத்துவம்
தந்திருப்பது நாம் மட்டுமே என்றால் மிகை இல்லை.வாகனங்கள் என்ற அளவில்
வித்தியாசம் இருந்தாலும், இன்று நம் கட்டுரைக்கு நாம் எடுத்திருக்கும் விஷம்
மன்னிக்கவும் விஷயம் பாம்பு.
படையையே நடுங்கவைக்க கூடிய, கொடிய விஷமுள்ள பாம்பு, கடவுளர்களிடம்
'பச்சக்கென்று'ஒட்டிக்கொண்டது எப்படி..?ஆய்வு செய்ய வேண்டிய விஷயமாக
எனக்குபட்டது.
சிவனின் கழுத்தை சுற்றி இருந்துகொண்டு அவரது தலையிலேயே சர்வகாலமும் இருக்கிற
பாம்பு பற்றியும்,
கண்ணன்
ஏறி நின்று நடம் புரிந்த ஐந்து தலை நாகமும், மகாவிஷ்ணுவுக்கு பார்கடலில்
மெத்தையாய் விளங்கும் ஆதிஷேஷன் பற்றியும்,அம்மனின் கைகளில்
இருப்பதும்,வினாயகனின் இடுப்பில் கட்டபட்டு இருப்பதும், கந்தவேலனின்
அரும்பெரும் வாகனமான் மயிலின் காலில் மிதிபட்டிருப்பதுமான ஒரே பாம்பினத்தின்
வெவ்வேறு மதிப்பீடுகளை உற்றுனோக்க வேண்டியிருக்கிறது.
மிக சாதாரணமாக ஒரு கருத்தை எல்லோரும் கூறுவதுண்டு.
இந்திய ஆன்மிக பண்பாடு என்பது "மரம்,செடி,கொடி.மண்,மலை,பறவை, விலங்கு,உயிருள்ள
பொருள்,உயிரற்ற பொருள் என அனைத்தையுமே தெய்வாம்சம் பொருந்தியதாக பார்ககூடியது"
என்று.

எல்லா
உயிர்களையும் மதிக்க வேண்டும் என்கிற கருத்தியலுக்கு இது
பொருந்தகூடியதுதான் என்றாலும், அதற்குரிய சரியான காரணத்தை காண வேண்டி உள்ளது.
உலக உயிர்கள் அத்தனைக்குமே-நேர்மறையான சக்தியும், எதிர்மறையான சக்தியும்
உண்டு.மனிதன் உள்ளீடாக.
நம் முன்னோர்கள் ஒவ்வொன்றையுமே காரணகாரியத்தோடுதான் வைத்திருக்கிறார்கள்
என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.
ஒவ்வொரு விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து,.மிக அக்கறையோடு குறியீடு ஆக்கி
இருக்கிறார்கள்.

பாம்புகள் இன்னமும் பல சந்தேகங்களுக்கு விடை சொல்லமுடியாத ஒரு உயிரினம். பாம்பு
மகுடி வாசித்தால் படம் எடுத்து ஆடுவதை நாம் கூட பார்த்திருக்கிறோம்.ஆனாம்
பாம்புக்கு காதுக்ள் கிடையாது. பூமியின் மீது பதியப்படும் அதிர்சியை தன் உடல்
வழியே உள்வாங்கி உணரக்கூடியது எனும் கருத்தும் உண்டு.

பாம்பு மனிதனுக்கு கட்டுப்படாத (சினிமா பாம்புகள் தவிர்த்து) ஒரு உயிரினம். அதை
பழக்கப்படுத்த முடியாது என்பதில் ஆதி மனிதன் எப்படியோ முடிவெடுத்துவிட்டான்.அது
இன்று வரை தொடர்கிறது. ஆயினும் ஆன்மீகத்தில் பாம்புக்கு அப்படியென்ன
முக்கியத்துவம் தரவேண்டியிருக்கிறது என்பதே நம் கேள்வி.
நம் கலாச்சாரத்தில் பக்தி என்பது ஞானம் பெறுவதற்கான் பயிற்சி களம்.எல்லைஅற்ற
அன்பை பெற பக்தி நிலையில் நாம் கவனம் செலுத்தி நாம் செய்யும் அன்பு பயிற்சிதான்
ஞானம் அடைவதற்கான படி.

பெருவெடிப்புக்கான (big-bang) தொடர்ச்சியில் உருவான எண்ணற்ற கோள்களில் நாம்
கணக்கில் வைத்திருப்பது ஒன்பது. அதில் முழு கிரகங்கள் ஏழு, சாயா எனும் நிழல்
கிரகங்கள் இரண்டு. அந்த இரு நிழல் கிரங்கங்களுக்கும் நாம் தந்திருக்கும் வடிவம்
பாம்பு.(ராகு,கேது). அவ்வப்போது வந்துபோகும் கிரகணங்கள் இரண்டு. அதில்
சந்திரகிரகணம் என்பது நிலவை பாம்பு விழுங்குவதானது.
ஜோதிட உலகின் கூற்றுப்படி- சந்திரன் என்பது மனதின் அம்சம். இங்கிருந்து நம்
ஆய்வை கொண்டுசெலுத்தினால் ஓரளவுக்கு இலக்கை அடைய முடியும் என தோணுகிறது.
பாம்பானது நிலவை விழுங்கும் நிகழ்வை நாம் எப்படி பார்க்கிறோம்,,?
கிரகணம் முடிந்ததும் வீட்டை மெழுகி,அனைவரும் குளித்து,குளிக்கும் வரை
சாப்பிடாமல் இருந்து-இப்படி பலபல கருத்தியல்கள்.ஆக நிலவை பாம்பு விழுங்குவது
மங்களகரமான விஷயமில்லை.
பாம்பின் அம்சம்- மனதை குறிக்கும் நிலவை விழுங்குதல் கூடாது.
நம் மனதை எந்த பாம்பும் வந்து விழுகிவிடப் போவதில்லை..ஆனால் பாம்பின் அம்சம்
விழுங்க வாய்ப்புள்ளது.
பாம்பின் அம்சமென்ன..?
எதிர்மறை அம்சம்- பாம்பு மிகவும் கோபப்படக்கூடியது. அதன் சீற்றமே இதற்கு
சாட்சி. பாம்பு தன் எதிரியை வஞ்சம் வைத்து கொல்லகூடியது.அது படமெடுத்தாடும்
வேகமானது "நான்"என நிமிர்ந்து நிற்கும் ஆணவத்தின்,தனிமனித ஆளுமையின்
குறியீடு.தீண்டியதும் மரணம் தரும் விஷத்தை தன்வசம் கொண்டது.
நம் ஒவ்வொரு கோயில்களிலும் தென் திசைபார்த்து சின்முத்திரை காட்டி
அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை பார்க்கிறோம். அவரது சின் முத்திரை நமக்கு
சொல்ல்க்கூடிய செய்தி என்ன..?
"நான் என்கிற ஆள்காட்டிவிரலை, சினம் என்கிற நடுவிரல்,செருக்கு என்கிற
மோதிரவிரல்,சிற்றின்பம் எனும் சுண்டுவிரல் இவற்றிலிருந்து விலக்கி, பரம்பொருள்
எனும் கட்டைவிரலோடு சேர்த்துகொள்வதே.
"நான்"எனும் சுயம் இருக்கவேண்டிய நிலைப்பாட்டைகுறித்து சிந்தித்த முன்னோர்கள்
பாம்பை கையில் எடுத்துள்ளார்கள் எனும் முடிவுக்குவர ஏதுவாய் இருக்கிறது.

பாம்பின் நேர்மறை அம்சம்- தன்னிடம் உள்ள விஷத்தை பிரயோகிக்காமல் அப்படியே
வைத்திருக்கும் பாம்பு அதை குறிப்பிட்ட நாளுக்கு பின் மாணிக்க கல்லாக
மாற்றுகிறது. மாணிக்கம் ஒளி வீசிக்கூடியது.
மதி, மந்திரம்,மருந்து,மாணிக்கம் என்றொரு வரிசை சொல்லப்படுவதுண்டு.
ஒவ்வொரு மனிதனும் தம்மிடமுள்ள தீயதை பிரயோகிக்காமல் அதை தவமாக மாற்றி
ஒளிரூபத்துக்கு மாறவேண்டும்.

இக்கருத்து எனக்கு மிகவும் உடன்பாடாய் உள்ளது.
பார்கடலில் துயிலும் விஷ்ணு வெறுமனே தூங்கவில்லை. அவர் அறிதுயிலில்
இருக்கிறார்.அனைத்தையும் அறிந்துகொண்டே தூங்கியும் தூங்காத நிலையில்
படுத்திருக்கிறார்.அவரை மீறி ஆதிஷேஷன் விளையாடுவானேயானால் அதை கருடன்
பார்த்துகொள்வார்.
மூலாதார கடவுளான கணபதி நாகத்தை தன் இடுப்பில் கட்டி இருக்கிறார்.ஆணவத்தையும்,
சினத்தையும்,வஞ்சகத்தையும், தலை எடுக்க விடாமல் இறுக்கி கட்டி
வைத்திருக்கிறார்,
முருகனின் வாகனம் மயில் சாதாரண பறவை அல்ல. அது வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய
ஞானப்பறவை.மயில் தன் இனப்பெருக்கத்தை எப்படி நிகழ்த்துகிறது என்பது இன்னும்
யாரும் அறியாத சங்கதியாகவே உள்ளது. ஆறறிவு கடவுளுக்கு அதனால்தான் மயில்
வாகனமானது. அந்த அறிவின் கால்களில் அடங்கி ஒடுங்கி சுருண்டுகிடக்கிறது பாம்பு.
அந்த பாம்பை இப்படியெல்லாம் பழக்கிவிட்டால் அப்புறம் சிவனை போல அதை
கையில்,கழுத்தில்,தலையில்,எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
அகந்தையையும்,ஆணவமும்,நான் என்கிற செருக்கும் நம் கட்டுக்குள் இருக்கும்.




யோகவியல் ரீதியில் பார்க்கும் பார்வைதான் பாம்பிற்கு நாம் த்ரும் உச்ச மரியாதை.
சுயமனித சக்தியை உசுப்பி எழுப்பும் குண்டலினி எனும் மாயசக்தி நம் மூலாதாரத்தில்
ஒரு பாம்பு வடிவில் தூங்குவதாகத்தான் முன்னோர்கள் கணித்துள்ளார்கள்
அந்த பாம்பு நமக்குள் எப்படி வந்தது..?எப்போது வந்தது,..?
பாம்புகள் வசிக்கும் புற்றை உற்று நோக்குங்கள். அதன் உச்சி வழியாக-தலையை
முதலில் உள் நுழைத்து- வால் இறுதியாய் மறைய உள்ளிறங்கும்.
வெளியே வரும்போது தலை முதலில் தெரிய வெளிப்படும்.
நமக்கும் அப்படித்தான் உச்சி தலை வழியேதான் உயிராற்றல் இறங்கி வருகிறது. அதை
மீண்டும் உயர்த்த வேண்டும்.
குண்டலினி பாம்பு தன் விஷத்தை பிரயோகிக்காமல் -உச்சிக்கு வநது மாணிக்கத்தை கக்க
வேண்டும்.
நாம் ஒளிரூப மனிதர்களாய் மாறவேண்டும்.
நமக்குள் இருக்கும் பாம்பை ஆட்டுவிக்க இன்றே மகுடியை எடுப்போமா..?

1 comment:

  1. அய்யா..! என் அறிவுக்கண்ணை திறந்தீட்டீங்களே.!
    கடவுளா பார்த்துதான் இந்த வலைக்கு அனுப்பி வச்சாரு பொலிருக்கு.வாழ்க வளமுடன்.
    சாமியே சரணம் ஐயப்பா.!

    ReplyDelete

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Blog Archive

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)